தேடல்


2:160
2:160 اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَيَّـنُوْا فَاُولٰٓٮِٕكَ اَ تُوْبُ عَلَيْهِمْۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِيْمُ‏
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் تَابُوْا மன்னிப்புக் கோரினார்கள் وَاَصْلَحُوْا இன்னும் சீர்திருத்தினார்கள் وَبَيَّـنُوْا இன்னும் தெளிவுபடுத்தினார்கள் فَاُولٰٓٮِٕكَ இன்னும் அவர்கள் اَ تُوْبُ மன்னிப்பேன் عَلَيْهِمْۚ அவர்களை وَاَنَا நான் التَّوَّابُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ‏ மகா கருணையாளன்
2:160. ஆயினும், அவர்களில் எவர்கள் வருந்தி வேதனைப்பட்டு, (வேதங்களில் தாம் மறைத்தவற்றை) சீர்திருத்தி, அவற்றை (மனிதர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைக்கின்றனரோ அவர்களை நான் மன்னித்து விடுவேன். நானோ மிக்க மன்னிப்பாளன்; மிகக் கருணையாளன்.
3:187
3:187 وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ الَّذِيْنَ اُوْتُوْا الْكِتٰبَ لَتُبَيِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗ فَنَبَذُوْهُ وَرَآءَ ظُهُوْرِهِمْ وَ اشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًاؕ فَبِئْسَ مَا يَشْتَرُوْنَ‏
وَاِذْ சமயம் اَخَذَ வாங்கினான் اللّٰهُ அல்லாஹ் مِيْثَاقَ உறுதிமொழியை الَّذِيْنَ எவர்கள் اُوْتُوْا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் لَتُبَيِّنُنَّهٗ நிச்சயமாக நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்/அதை لِلنَّاسِ மக்களுக்கு وَلَا இன்னும் கூடாது تَكْتُمُوْنَهٗ நீங்கள் அதை மறைக்க فَنَبَذُوْهُ எறிந்தனர்/அதை وَرَآءَ பின்னால் ظُهُوْرِ முதுகுகள் هِمْ அவர்களுடைய وَ اشْتَرَوْا இன்னும் வாங்கினர் بِهٖ அதற்குப் பகரமாக ثَمَنًا கிரயத்தை قَلِيْلًاؕ சொற்பம் فَبِئْسَ மிகக் கெட்டது مَا எது يَشْتَرُوْنَ‏ வாங்குகிறார்கள்
3:187. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் ‘‘(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (எனினும்) அவர்கள் (தங்களின்) இவ்வுறுதிமொழியைத் தங்கள் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் பெற்றுக்கொண்டது மகா கெட்டதாகும்.
5:67
5:67 يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ‌ ؕ وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسٰلَـتَهٗ‌ ؕ وَاللّٰهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏
يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ தூதரே بَلِّغْ எடுத்துரைப்பீராக مَاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு مِنْ இருந்து رَّبِّكَ‌ ؕ உம் இறைவன் وَاِنْ لَّمْ تَفْعَلْ நீர் செய்யவில்லையென்றால் فَمَا بَلَّغْتَ நீர் எடுத்துரைக்கவில்லை رِسٰلَـتَهٗ‌ ؕ தூதை/அவனுடைய وَاللّٰهُ அல்லாஹ் يَعْصِمُكَ காப்பாற்றுவான்/உம்மை مِنَ النَّاسِ‌ ؕ மக்களிடமிருந்து اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ சமுதாயத்தை الْـكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்கள்
5:67. (நம்) தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எல்லாம் (ஒரு குறைவுமின்றி அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக!. நீர் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக ஆக மாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.
5:92
5:92 وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا‌ ۚ فَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ‏
وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் الرَّسُوْلَ தூதருக்கு وَاحْذَرُوْا‌ ۚ இன்னும் எச்சரிக்கையாக இருங்கள் فَاِنْ تَوَلَّيْتُمْ நீங்கள்திரும்பினால் فَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّمَا நிச்சயமாக عَلٰى رَسُوْلِنَا நம் தூதர் மீது الْبَلٰغُ எடுத்துரைப்பது الْمُبِيْنُ‏ தெளிவாக
5:92. அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
5:99
5:99 مَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ‌ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ‏
مَا கடமை இல்லை عَلَى மீது الرَّسُوْلِ தூதர் اِلَّا தவிர الْبَلٰغُ‌ ؕ எடுத்துரைப்பது وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் مَا எதை تُبْدُوْنَ வெளிப்படுத்துகிறீர்கள் وَمَا இன்னும் எதை تَكْتُمُوْنَ‏ மறைக்கிறீர்கள்
5:99. நம் தூதருடைய கடமை (நம்) தூதை எடுத்துரைப்பதே தவிர (அவ்வாறே நடக்கும்படி உங்களை நிர்ப்பந்திப்பது) அல்ல. நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
5:109
5:109 يَوْمَ يَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَيَقُوْلُ مَاذَاۤ اُجِبْتُمْ‌ ؕ قَالُوْا لَا عِلْمَ لَـنَا ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ‏
يَوْمَ நாளில் يَجْمَعُ ஒன்று சேர்ப்பான் اللّٰهُ அல்லாஹ் الرُّسُلَ தூதர்களை فَيَقُوْلُ கூறுவான் مَاذَاۤ என்ன? اُجِبْتُمْ‌ ؕ பதில் கூறப்பட்டீர்கள் قَالُوْا கூறுவார்கள் لَا عِلْمَ அறவே ஞானமில்லை لَـنَا ؕ எங்களுக்கு اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் عَلَّامُ மிக மிக அறிந்தவன் الْغُيُوْبِ‏ மறைவானவற்றை
5:109. (நபியே!) ஒரு நாளில் அல்லாஹ், (தன்) தூதர்களை ஒன்று சேர்த்து ‘‘நீங்கள் எனது தூதை மக்களிடம் எடுத்துரைத்த சமயத்தில்) அவர்கள் உங்களுக்கு என்ன பதில் கூறினார்கள்?'' என்று கேட்பான். அதற்கவர்கள், (‘‘நாங்கள் உயிருடன் இருந்த வரை அவர்களுடைய வெளிக்கோலத்தையே நாங்கள் அறிவோம். அதற்கு மாறாக உள்ளத்தில் உள்ளதையோ, நாங்கள் இறந்தபின் அவர்கள் செய்ததையோ) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மறைவான அனைத்தையும் நன்கறிந்தவன்'' என்று கூறுவார்கள்.
7:62
7:62 اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّىْ وَاَنْصَحُ لَـكُمْ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
اُبَلِّغُكُمْ எடுத்துரைக்கிறேன்/உங்களுக்கு رِسٰلٰتِ தூது(செய்தி)களை رَبِّىْ என் இறைவனின் وَاَنْصَحُ இன்னும் உபதேசிக்கிறேன் لَـكُمْ உங்களுக்கு وَاَعْلَمُ இன்னும் அறிகிறேன் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَا لَا تَعْلَمُوْنَ‏ எவற்றை/அறியமாட்டீர்கள்
7:62. ‘‘நான் என் இறைவனின் தூதுகளையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்.
7:68
7:68 اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّىْ وَاَنَا لَـكُمْ نَاصِحٌ اَمِيْنٌ‏
اُبَلِّغُكُمْ எடுத்துரைக்கிறேன்/உங்களுக்கு رِسٰلٰتِ தூதுகளை رَبِّىْ என் இறைவனின் وَاَنَا நான் لَـكُمْ உங்களுக்கு نَاصِحٌ உபதேசி(ப்பவன்) اَمِيْنٌ‏ நம்பிக்கைக்குரிய
7:68. ‘‘என் இறைவனின் தூதுகளையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய உபதேசியாகவும் இருக்கிறேன்.
7:79
7:79 فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّىْ وَنَصَحْتُ لَـكُمْ وَلٰـكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِيْنَ‏
فَتَوَلّٰى திரும்பினார் عَنْهُمْ அவர்களை விட்டு وَقَالَ இன்னும் கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَقَدْ اَبْلَغْتُكُمْ திட்டவட்டமாக/ எடுத்துரைத்தேன்/உங்களுக்கு رِسَالَةَ தூதை رَبِّىْ என் இறைவனின் وَنَصَحْتُ உபதேசித்தேன் لَـكُمْ உங்களுக்கு وَلٰـكِنْ எனினும் لَّا تُحِبُّوْنَ நீங்கள் நேசிப்பதில்லை النّٰصِحِيْنَ‏ உபதேசிப்பவர்களை
7:79. (அந்நேரத்தில் ஸாலிஹ் நபி) அவர்களிலிருந்து விலகிக்கொண்டு (அவர்களை நோக்கி,) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இறைவனின் தூதையே எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்தேன். எனினும் நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிக்கவில்லை'' என்று கூறினார்.
7:93
7:93 فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّىْ وَنَصَحْتُ لَـكُمْ‌ۚ فَكَيْفَ اٰسٰی عَلٰى قَوْمٍ كٰفِرِيْنَ‏
فَتَوَلّٰى ஆகவே விலகினார் عَنْهُمْ அவர்களை விட்டு وَقَالَ இன்னும் கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَقَدْ திட்டமாக اَبْلَغْتُكُمْ உங்களுக்கு எடுத்துரைத்தேன் رِسٰلٰتِ தூதுகளை رَبِّىْ என் இறைவனின் وَنَصَحْتُ இன்னும் உபதேசித்தேன் لَـكُمْ‌ۚ உங்களுக்கு فَكَيْفَ ஆகவே எவ்வாறு اٰسٰی துயர்கொள்வேன் عَلٰى மீது قَوْمٍ சமுதாயத்தின் كٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களான
7:93. (அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூது செய்திகளைத்தான் உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே, (அதை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்'' என்று கூறினார்.