84. ஸூரத்துல் இன்ஷிகாக்(பிளந்து போதல்)
மக்கீ, வசனங்கள்: 25

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
84:1
84:1 اِذَا السَّمَآءُ انْشَقَّتْۙ‏
اِذَا போது السَّمَآءُ வானம் انْشَقَّتْۙ‏ பிளந்துவிடும்
84:1. இதஸ் ஸமா'உன் ஷக்கத்
84:1. வானம் பிளந்துவிடும் போது-
84:2
84:2 وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْۙ‏
وَاَذِنَتْ இன்னும் அது செவிசாய்த்தது لِرَبِّهَا தன் இறைவனுக்கு وَحُقَّتْۙ‏ இன்னும் கீழ்ப்படிந்தது
84:2. வ அதினத் லி ரBப்Bபிஹா வ ஹுக்கத்
84:2. தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது-
84:3
84:3 وَاِذَا الْاَرْضُ مُدَّتْؕ‏
وَاِذَا இன்னும் போது الْاَرْضُ பூமி مُدَّتْؕ‏ விரிக்கப்படும்
84:3. வ இதல் அர்ளு முத்தத்
84:3. இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
84:4
84:4 وَاَلْقَتْ مَا فِيْهَا وَتَخَلَّتْۙ‏
وَاَلْقَتْ இன்னும் எரிந்து(விடும்) مَا فِيْهَا தன்னில் உள்ளவற்றை وَتَخَلَّتْۙ‏ இன்னும் காலியாகிவிடும்
84:4. வ அல்கத் மா Fபீஹா வ தகல்லத்
84:4. அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
84:5
84:5 وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْؕ‏
وَاَذِنَتْ இன்னும் அது செவிசாய்த்து لِرَبِّهَا தன் இறைவனுக்கு وَحُقَّتْؕ‏ இன்னும் கீழ்படிந்து
84:5. வ அதினத் லி ரBப்Bபிஹா வ ஹுக்கத்
84:5. தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
84:6
84:6 يٰۤاَيُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰى رَبِّكَ كَدْحًا فَمُلٰقِيْهِ‌ۚ‏
يٰۤاَيُّهَا الْاِنْسَانُ மனிதனே! اِنَّكَ நிச்சயமாக நீ كَادِحٌ சிரமத்தோடு முயற்சிப்பவன் اِلٰى பக்கம் رَبِّكَ உன் இறைவன் كَدْحًا சிரமத்தோடு முயற்சித்தல் فَمُلٰقِيْهِ‌ۚ‏ அடுத்து நீ அவனை சந்திப்பாய்
84:6. யா அய்யுஹல் இன்ஸானு இன்னக காதிஹுன் இலா ரBப்Bபிக கத் ஹன் Fபமுலாகீஹ்
84:6. மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
84:7
84:7 فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ‏
فَاَمَّا مَنْ ஆகவே, யார் اُوْتِىَ கொடுக்கப்பட்டாரோ كِتٰبَهٗ தன் பதிவேடு بِيَمِيْنِهٖۙ‏ தன் வலக்கரத்தில்
84:7. Fப அம்மா மன் ஊதிய கிதாBபஹூ Bபியமீனிஹ்
84:7. ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
84:8
84:8 فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيْرًا ۙ‏
فَسَوْفَ يُحَاسَبُ அவர் கணக்குக் கேட்கப்படுவார் حِسَابًا கணக்கு يَّسِيْرًا ۙ‏ இலகுவாகவே
84:8. Fபஸவ்Fப யுஹாஸBப் ஹிஸாBப(ன்)ய் யஸீரா
84:8. அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
84:9
84:9 وَّيَنْقَلِبُ اِلٰٓى اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ‏
وَّيَنْقَلِبُ இன்னும் திரும்புவார் اِلٰٓى பக்கம் اَهْلِهٖ தன் குடும்பத்தார் مَسْرُوْرًا ؕ‏ மகிழ்ச்சியானவராக
84:9. வ யன்கலிBபு இலா அஹ்லிஹீ மஸ்ரூரா
84:9. இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
84:10
84:10 وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖۙ‏
وَاَمَّا مَنْ இன்னும் ஆக, யார்? اُوْتِىَ கொடுக்கப்பட்டானோ كِتٰبَهٗ தன் பதிவேடு وَرَآءَ பின்னால் ظَهْرِهٖۙ‏ தன் முதுகுக்கு
84:10. வ அம்மா மன் ஊதிய கிதாBபஹூ வரா'அ ளஹ்ரிஹ்
84:10. ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
84:11
84:11 فَسَوْفَ يَدْعُوْا ثُبُوْرًا ۙ‏
فَسَوْفَ يَدْعُوْا அவன் கூவுவான் ثُبُوْرًا ۙ‏ நாசமே
84:11. Fபஸவ்Fப யத்'ஊ துBபூரா
84:11. அவன் (தனக்குக்) “கேடு” தான் எனக் கூவியவனாக-
84:12
84:12 وَّيَصْلٰى سَعِيْرًا ؕ‏
وَّيَصْلٰى இன்னும் பொசுங்குவான் سَعِيْرًا ؕ‏ சயீர் என்ற நரகத்தில்
84:12. வ யஸ்லா ஸ'ஈரா
84:12. அவன் நரகத்தில் புகுவான்.
84:13
84:13 اِنَّهٗ كَانَ فِىْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ‏
اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருந்தான் فِىْۤ اَهْلِهٖ தன் குடும்பத்தில் مَسْرُوْرًا ؕ‏ மகிழ்ச்சியானவனாக
84:13. இன்னஹூ கான Fபீ அஹ்லிஹீ மஸ்ரூரா
84:13. நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
84:14
84:14 اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ يَّحُوْرَ ۛۚ‏
اِنَّهٗ நிச்சயமாக அவன் ظَنَّ எண்ணினான் اَنْ لَّنْ يَّحُوْرَ ۛۚ‏ திரும்பிவரவே மாட்டான் என
84:14. இன்னஹூ ளன்ன அன் ல(ன்)ய் யஹூர்
84:14. நிச்சயமாக, தான் (இறைவன் பால்) “மீளவே மாட்டேன்” என்று எண்ணியிருந்தான்.
84:15
84:15 بَلٰٓى ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِيْرًا ؕ‏
بَلٰٓى ۛۚ ஏனில்லை اِنَّ நிச்சயமாக رَبَّهٗ அவனுடைய இறைவன் كَانَ இருக்கிறான் بِهٖ அவனை بَصِيْرًا ؕ‏ உற்றுநோக்குபவனாக
84:15. Bபலா இன்ன ரBப்Bபஹூ கான Bபிஹீ Bபஸீரா
84:15. அப்படியல்ல; நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
84:16
84:16 فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِۙ‏
فَلَاۤ اُقْسِمُ ஆகவே சத்தியமிடுகிறேன் بِالشَّفَقِۙ‏ செம்மேகத்தின்மேல்
84:16. Fபலா உக்ஸிமு Bபிஷ்ஷFபக்
84:16. இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
84:17
84:17 وَالَّيْلِ وَمَا وَسَقَۙ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக وَمَا وَسَقَۙ‏ ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக
84:17. வல்லய்லி வமா வஸக்
84:17. மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
84:18
84:18 وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ‏
وَالْقَمَرِ சந்திரன் மீது சத்தியமாக اِذَا اتَّسَقَۙ‏ அது முழுமையடையும் போது
84:18. வல்கமரி இதத் தஸக்
84:18. பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
84:19
84:19 لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ‏
لَتَرْكَبُنَّ நிச்சயமாக பயணிக்கிறீர்கள் طَبَقًا ஒரு நிலைக்கு عَنْ طَبَقٍؕ‏ ஒரு நிலையிலிருந்து
84:19. லதர்கBபுன்ன தBபகன் 'அன் தBபக்
84:19. நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
84:20
84:20 فَمَا لَهُمْ لَا يُؤْمِنُوْنَۙ‏
فَمَا ஆகவே என்ன لَهُمْ அவர்களுக்கு لَا يُؤْمِنُوْنَۙ‏ அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை
84:20. Fபமா லஹும் லா யு'மினூன்
84:20. எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்ளவதில்லை.
84:21
84:21 وَاِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْاٰنُ لَا يَسْجُدُوْنَ ؕ ۩
وَاِذَا قُرِئَ இன்னும் ஓதப்பட்டால் عَلَيْهِمُ அவர்கள் மீது الْقُرْاٰنُ அல்குர்ஆன் لَا يَسْجُدُوْنَ ؕ ۩‏ அவர்கள் சிரம் பணிவதில்லை
84:21. வ இதா குரி'அ 'அலய்ஹிமுல் குர்'ஆனு லா யஸ்ஜுதூன்
84:21. மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
84:22
84:22 بَلِ الَّذِيْنَ كَفَرُوْا يُكَذِّبُوْنَ ۖ‏
بَلِ மாறாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் يُكَذِّبُوْنَ ۖ‏ பொய்ப்பிக்கின்றனர்
84:22. Bபலில் லதீன கFபரூ யுகத்திBபூன்
84:22. அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
84:23
84:23 وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يُوْعُوْنَ ۖ‏
وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا يُوْعُوْنَ ۖ‏ அவர்கள் சேகரிப்பதை
84:23. வல்லாஹு அஃலமு Bபிமா யூ'ஊன்
84:23. ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
84:24
84:24 فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ‏
فَبَشِّرْ ஆகவே நற்செய்தி கூறுவீராக هُمْ அவர்களுக்கு بِعَذَابٍ வேதனையைக் கொண்டு اَلِيْمٍۙ‏ துன்புறுத்தும்
84:24. FபBபஷ்ஷிர்ஹும் Bபி'அதாBபின் அலீம்
84:24. (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
84:25
84:25 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ
اِلَّا தவிர الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்கள் لَهُمْ அவர்களுக்கு اَجْرٌ நன்மை (கூலி) غَيْرُ مَمْنُوْنٍ‏ முடிவுறாத
84:25. இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
84:25. எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.